சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே என்னைக் களி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற் சித்திரமே அல்லி அணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனேஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி ஆடி திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடிஉச்சி தனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி மேச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடிகன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம் தான் கள்வெரி கொள்ளுதடி உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மதம் ஆகுதடிஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என் கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்றதன்றோ
No comments:
Post a Comment